×

நாளை மலர் கண்காட்சி துவக்கம்;மாடங்களில் மலர் தொட்டி அடுக்கும் பணி தீவிரம்

ஊட்டி, மே 9: நாளை மலர் கண்காட்சி துவங்கும் நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா முழுவதிலும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக் காணப்படும். அதேபோல், 45 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, மலர் கண்காட்சியின் போது மாடங்கள் மற்றும் புல் மைதானங்களில் பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வார்கள்.

வழக்கம் போல், இம்முறையும் பூங்கா முழுவதிலும் கடந்த டிசம்பர் மாதம் முதல் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா தயார் செய்யப்பட்டது. அதேபோல், 45 ஆயிரம் தொட்டிகளில் லில்லியம், பிரெஞ்ச் மேரிகோல்டு, இன்கா மேரிேகால்டு, பேன்சி, டேலியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் தற்போது மலர்கள் பூத்து காணப்படுகின்றன. இவை வழக்கம் போல், தற்போது மாடங்களில் அடுக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. நாளை மலர் கண்காட்சி துவங்கும் நிலையில், தற்போது மலர் தொட்டிகள் கொண்டு மாடங்களில் அலங்கார பணிகள் தீவிரமாக நடநப்து வருகிறது. பல்வேறு வண்ணங்களை கொண்ட லில்லியம் மலர்கள், ஆர்கிட் மலர்கள் உட்பட பல்வேறு மலர் தொட்டிகள் கொண்டு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post நாளை மலர் கண்காட்சி துவக்கம்;மாடங்களில் மலர் தொட்டி அடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Government Botanical Garden ,
× RELATED மலர் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா: அலங்கார பணி தீவிரம்